நடைபெற்ற மொத்த தேர்தல் செயற்பாடுகளும் அமைதியாக இடம்பெற்றதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இம்முறை நடைபெற்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் 2010, 2015 இடம்பெற்ற தேர்தல்களை 2019 ஆண்டு இம்முறை இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும் போது வன்முறைச் செயற்பாடுகள் குறைவாக இருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.
அரச சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தும் சம்பவங்களும் குறைந்திருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் றோகண கெட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.