கோத்தபயவுக்கு சஜித் பாராட்டு

sajith2
sajith2

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவை பாராட்டுவதோடு கோத்தபாயவிற்கு வாழ்த்துக்களையும் கூறுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு முடிந்து நேற்று இரவில் இருந்து வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்ற நிலையில் காலையில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.

தற்போது நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே 50% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ள நிலையில் கோத்தபய ராஜபக்சவின் வெற்றி உறுதியாகிவிட்டது.

இதன் காரணமாக கோத்தபய ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொண்டர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் ஈடுபாடு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச மக்களின் முடிவிற்கு தான் தலை வணங்குகின்றதாகவும் , ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகின்ற அதேவேளை தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் பணிகளை செய்த தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றி என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.