புதிய ஜனாதிபதிக்கு மோடி வாழ்த்து

namo1
namo1

இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

ருவிட்டர் ஊடாக அவர் தெரிவித்துள்ள வாழ்த்தில் ‘ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோதத்தாபய ராஜபக்ஷவிற்கு எனது வாழ்த்துக்கள். எமது இரு நாட்டிற்கும், நாட்டுமக்களுக்கும் இடையில் காணப்படும் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உங்களுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன். அத்தோடு எமது பிராந்தியத்தின் அமைதி, சுபீட்சம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றவுள்ளோம். ‘ என்று குறிப்பிட்டுள்ளார்