இலங்கை சனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச சிங்கள மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கோத்தபாயவை எதிர்த்து போட்டியிட்ட பிரதான போட்டியாளரான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச சிங்கள மக்களால் முற்றாக நிரகாரிக்கப்பட்டார். வடகிழக்குப் பிரதேசங்களில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்ற சஜித் பிரேமதாசவால் சிங்கள வாக்குகளைப் பெற முடியாமல் தோல்வியடைந்தார்.
இறுதி முடிவுகள்
கோத்தபாய ராஜபக்ச 6,924,255(52.25%)
சஜித் பிரேமதாச 5,564,239(41.99%)
அனுர குமார திசநாயக 418,553 (3.16%)
மகேஸ் சேனநாயக 49,655 (0.37%)
ஏனையவர்கள் 295,797 (2.23%)