உத்தியோகபூர்வமாக நாட்டின் ஜனாதிபதி அறிவிப்பு

new president
new president

நாட்டில் நடைபெற்ற 8வது ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ 6,924,255 (52.25 சதவீதம்) வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 (41.99 சதவீதம்) வாக்குகளையும் பெற்று 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் கோத்தாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கை வரலாற்றில் மைத்திரிபால சிறிசேன 6,217,162 வாக்குகளைப் பெற்று அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர் பட்டியலில் மைத்திரிபால சிறிசேன முதலிடத்தில் காணப்பட்டிருந்தார்.

அதனை முறியடிக்கும் விதத்தில் தற்போது கோத்தாபய ராஜபக்ச 6,924,255 வாக்குகளைப் பெற்று முன்னிலைக்கு வந்துள்ளார்.