உடன் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வதே நல்லது !!

es
es

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் அதிகாரத்தை எவ்வாறு கையளிப்பது மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேற்று பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே சிறந்தது என அதிகமானோர் கருத்துத் தெரிவித்துள்ளதாக  அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.