அரசாங்கம் குறித்து இறுதித் தீர்மானம்

4 oad
4 oad

அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (18) பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலுக்கு அரசாங்கத்திலுள்ள சகல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திலுள்ள கட்சிகளின் அரசியல் தலைவர்கள் அமைச்சரவை அமைச்சர்கள் ஆகியோர் நேற்று (17) மாலை பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடாத்திய கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.