இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்தியப் பிரதமர், பாகிஸ்தான் ஜனாதிபதி, மாலைதீவு ஜனாதிபதி, இலங்கைக்கான அமெரிக்க தூதரகமம் உள்ளிட்டோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோத்தபாயவிற்கு முதலாவதாக வாழ்த்து தெரிவித்திருந்த இந்திய பிரதமர் மோடியின் வரவேற்பை ஏற்று விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
அவ்வாறு இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொள்கின்ற வேளையில் கோத்தாபய ராஜபக்ஷ,ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணமாக இது அமையும்