கோத்தபாயவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் – சஜித்

1 baya l
1 baya l

இந்­நாட்டின் பிரஜை என்ற வகையில், ஒரு­மித்த நாட்­டிற்குள் அனைத்து இன,மத மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து சுபீட்­ச­மா­ன­தொரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அவ­சி­ய­மான ஒத்­து­ழைப்பை ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விற்கு நான் தொடர்ந்தும் வழங்­குவேன் என்று புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் சார்பில் தேர்­தலில் போட்­டி­யிட்ட சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.
இலங்கை ஜன­நா­யக சோச­லிச குடி­ய­ரசின் ஏழா­வது ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­கான எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்­தலின் முடி­வு­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ரினால் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்ட பின்னர், உரை­யாற்­றிய போதே சஜித் பிரே­ம­தாச இவ்­வாறு குறிப்­பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது:
நாட்டின் அனைத்துப் பாகங்­களில் இருந்தும் எனக்­காக வாக்­க­ளித்த அனைத்து மக்­க­ளுக்கும் எனது இத­ய ­பூர்­வ­மான நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். நீங்கள் என்­மீது நம்­பிக்கை வைத்­தமை குறித்து மகிழ்­வ­டை­கிறேன். எனது 26 வருட அர­சியல் பய­ணத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு உங்­க­ளு­டைய ஆத­ரவு பெரும் உறு­து­ணை­யாக அமைந்­தி­ருந்­தது. அதே­போன்று எனது தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் ஓய்­வின்றிப் பணி­யாற்­றிய அனை­வ­ருக்கும் நன்றி தெரி­வித்துக் கொள்­கிறேன். நானும், எனது குடும்­பத்­தி­னரும் உங்­க­ளு­டைய அர்ப்­ப­ணிப்­புக்­களை ஒரு­போதும் மறக்­க­மாட்டோம்.
எமது நாடு சுதந்­திரம் அடைந்­த­தி­லி­ருந்து மிகவும் அமை­தி­யான ஜனா­தி­பதித் தேர்­தலை இம்­முறை கண்­டி­ருக்­கிறோம். கடந்த ஐந்து வரு­ட­கா­ல­மாக வலுப்­ப­டுத்­தப்­பட்ட ஜன­நா­யகம் மற்றும் சுயா­தீன கட்­ட­மைப்­புக்­களின் மறு­சீ­ர­மைப்பு என்­ப­வற்றின் விளைவே இது­வாகும். அவற்றின் ஊடா­கவே சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவை ஸ்திரப்­ப­டுத்த முடி­யு­மாக இருந்­த­துடன், சட்­டத்தின் ஆட்­சியும் நிலை­நாட்­டப்­பட்­டது.
மேலும் சுதந்­தி­ர­மா­னதும், நியா­ய­மா­ன­து­மான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான தலை­மைத்­து­வத்தை வழங்­கிய தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கும், ஆணைக்­கு­ழுவின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கும், இதில் பங்­க­ளிப்­புச்­செய்த அனைத்து அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் எனது நன்­றியைத் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். ஒருமித்த நாட்டிற்குள் அனைத்து இன,மத மக்களையும் ஒன்றிணைத்து சுபீட்சமானதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்பை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கோத்தபாய ராஜபக் ஷவிற்கு இந்நாட்டின் ஒரு பிரஜை என்ற வகையில் நான் வழங்குவேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.