தோல்வியை ஏற்றுக்கொண்டு சஜித் பிரேமதாசவிற்கு சார்பானவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்து கொண்டு வருகின்ற நிலையில் இன்று பாட்டளி சம்பிக்க ரணவக்க இராஜினாமா செய்து கொண்டுள்ளார்.
மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அவரது பதவி இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாக நேற்றைய தினம்
- ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச
- நிதி அமைச்சர் மங்கள சமரவீர
- விளையாட்டுத்துறை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ
- அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான மலிக் சமரவிக்ரம
- ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து கபீர் ஹாசிம்
- அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சரான அஜித் பெரேரா
- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.