அமைச்சுப் பொறுப்பை ஏற்க மறுக்கும் டக்ளஸ்

daglas
daglas

கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் தான் அங்கம் வகிக்க போவதில்லை என ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்:

என்னை நம்பி வாக்களிக்கும்படி நான் மக்களை கோரியிருந்த போதிலும் மக்கள் வாக்களிக்காத நிலையில், நான் அமைச்சு பதவியை ஏற்கும் தார்மீக தகுதியில்லையென நினைக்கிறேன்.

அமைச்சுப் பதவி மட்டுமே எமது நோக்கமென்றால் எமது கட்சி வேறுவிதமாக இருந்திருக்கும். அரசியல் நேர்மை எனக்கு முக்கியம்.

அதனால், அடுத்த பொதுத்தேர்தலில் மக்கள் ஆணையை பெற்ற பின்னரே அமைச்சுப் பதவியை ஏற்கவே விரும்புகிறேன்.

அமைச்சு பதவியை ஏற்கும்படி, அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், இதுவரை அதை நான் ஏற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.