பாகிஸ்தான் இராணுவம், ‘ஷகீன் -1’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை சோதனையினை இன்று செய்துள்ளது.
இந்த ஏவுகணை 650 கி.மீ. வரை அனைத்து வகையான ஆயுதங்களையும் தாங்கிச்செல்லக்கூடியது என பாகிஸ்தான் இராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணு ஆயுதத்தைத் தாங்கியபடி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணையினை இந்தியா கடந்த சனிக்கிழமை பரிசோதனை செய்ததுள்ள நிலையில் இந்த ஏவுகனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.