ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் மோதிய ஆட்டத்தின்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் நிக்கலஸ் பூரான் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்த நிலையில் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்மித் இந்த பிரச்சினையில் இருந்து நிக்கலஸ் பூரான் மீண்டு வலுவான வீரராக வருவார் என ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில்;
நிக்கலஸ் பூரானுடன் கரிபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடியுள்ளேன். அவர் திறமையான வீரர்.
அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அவர் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அதில் இருந்து கடந்து செல்வார் என நினைக்கிறேன்.
கிரிக்கெட்டில் அவர் ஒரு தலைசிறந்த வீரராக இருக்கப்போகிறார் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.