வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சிறுவர்கள் ‘ஸ்கிப்பிங்’ விளையாடி வருகிறார்கள்.
வியட்நாமின் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் சிறுவர்கள் சிலர் விளையாடுவதற்கு ஏதும் கிடைக்காத நிலையில் செத்த பாம்பை கண்டு பதற்றமடையாத சிறுவர்கள் கயிறுக்கு பதிலாக பாம்பின் உடலை கொண்டு ‘ஸ்கிப்பிங்’ விளையாட முடிவு செய்தனர்.
அதன்படி இறந்த பாம்பின் உடலை ஒரு சிறுவனும், சிறுமியும் இரு முனைகளை பிடித்து சுழற்ற நடுவில் நின்றிருந்த சிறுமி உற்சாகமாக துள்ளி குதித்து ‘ஸ்கிப்பிங்’ விளையாடியுள்ளார்.
சிறுவர், சிறுமிகளின் இந்த குறும்பு தனத்தை அங்கு நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.