ஜனாதிபதி ஒரு கட்சியிலும், பிரதமர் வேறொரு கட்சியிலும் இருக்கும் போது நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாது.
இதனால் பொதுமக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து பொதுத் தேர்தலை உடன் நடத்துவது சிறந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வஜிர் அபேவர்த்தன குறிப்பிட்டார்.