தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் எனும் எம்.ஜி.ராமச்சந்திரனின் 33ம் ஆண்டு நினைவு தினம் கல்வியங்காட்டில் இன்று (24) காலை இடம்பெற்றது.
இதன்போது அங்கு அமைந்துள்ள எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த இந்நிகழ்வு எம்.ஜி.ஆரின் நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் என யாழ் மக்களால் அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ் எம்.ஜி.ஆர், அவரது குடும்பத்தினர் உட்பட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் தமிழ்தேசிய மக்கள் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ராசேந்திரம் செல்வராஜா மற்றும் கல்வியங்காடு சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.