மூன்றில் ஒன்றை விட்டுக்கொடுக்குமாறு கோரிக்கை

mano ganesan
mano ganesan

ரணில் விக்ரமசிங்க மூன்று தலைமைப் பதவிகளையும் தன்வசம் வைத்துக்கொள்ளாது அவற்றில் ஒரு பதவியினை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியினதும், ஐக்கிய தேசிய முன்னணியினதும் தலைமைப் பதவியை வகிக்கின்றார்.

இரு பதவிகளையும் தன்வசம் வைத்துள்ள நிலையில் அவருக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியையும் வழங்குவது நியாயமானதல்ல என்பதே எமது நிலைப்பாடு.

அவர் முன்னைய இரு தலைமைப் பதவிகளையும் வகிப்பதாயின் எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிடின், எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை எடுத்துக் கொண்டு ஏனைய இரு தலைமைப் பதவிகளையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும்.

எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பது எதிர்வரும் 3ஆம் திகதியிற்குள் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.