கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தைக் கடந்தது

download 2 14
download 2 14

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 698 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 42 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 7 ஆயிரத்து 245 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது