கொரோனா நோயால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதா? இல்லையா? என்பதை, சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும் என்று, விடயத்துக்குப் பொறுப்பானவரான, ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் இது தொடர்பான விளக்கத்தை வழங்குமாறு, நாடளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயிடம் இன்று கோரியதனை அடுத்தே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.