கெலிஓயா பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று மரணித்தார்.
கெலிஓயா நகர்ப்பகுதிளிலுள்ள முச்சக்கரவண்டி தரப்பிடத்தில் கடந்த 12 ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
முச்சக்கரவண்டி ஒன்றை பின்நோக்கி செலுத்தும் போது மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதுண்டமை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
அத்துடன் தாக்குதலை நடத்திய நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.