ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று!

7 oad
7 oad

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் இன்று கோதகவேலா பிரதேச சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

57 வயதான ரஞ்சித் டி சொய்சா சிங்கப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றி வந்திருந்த நிலையில் கடந்த 04 ஆம் திகதி காலமானார்.

ரஞ்சித் டி சொய்சா முறையே 1997 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் இறக்குவாணை பிரதேச சபையின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.

2010 ஆம் ஆண்டில் மீண்டும் இறக்குவாணை பிரதேச சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் சபராகமுவ மாகாண சபையிலும் பணியாற்றினார்.

அத்துடன் ரஞ்சித் டி சொய்தா கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.