ஐ.நா தீர்மானம் தமிழர்களுக்கு சாதகமானது- சுமந்திரன்

1 2
1 2

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் திருப்புமுனையாக அமைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து எமது செய்திச் சேவை வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நீதிமன்ற பொறிமுறைகளின் ஊடாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கமும் சேர்ந்து முன்வர வேண்டும்.

எனவே அரசாங்கம், இனியாவது தாம் பயணிக்கும் பிழையான திசையிலிருந்து திரும்பி, சரியான திசையிலே பயணிக்க வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.