கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
சனிக்கிழமை காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு கரையோர காவற்துறை பிரிவில் புதுச்செட்டி வீதி பிரதேசத்தில் 703 கிராம் ஹெரோயினுடன் கொழும்பு 13 ஐ சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு , அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹொரோயினும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதே போன்று அநுராதபுரம் காவற்துறையினரால் 6 கிராம் ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை காவற்துறையினரினால் போதைப் பொருளுக்கு எதிரான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றார்.