கொழும்பு சிறைச்சாலை வளாகத்தினுள் பாதுகாப்பு கமரா கட்டமைப்புக்களை பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

6402d726ae0716c4f0f6748cfdd6e6b2 XL
6402d726ae0716c4f0f6748cfdd6e6b2 XL

கொழும்பு சிறைச்சாலை வளாகத்தினுள் மற்றும் வெளிப்புறங்களிலும் பாதுகாப்பு கமரா கட்டமைப்புக்களை பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடக பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளின் உட்புறமும் அதன் வெளிபுறமும் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல், மெகஸின், வெலிக்கடை பெண்கள் பிரிவு மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகியவற்றின் வளாகங்களை உள்ளடக்கும் வகையில் இந்த கமரா கட்டமைப்பு பொருத்தப்படவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் இந்த நடவடிக்கையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர களுத்துறை, மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு கமரா அமைப்பு பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.