முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் திம்பிலி கொரோனா வைத்தியசாலைக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் பெரண்டீனா நிறுவனத்தினால் ஒருதொகுதி சுகாதார மருத்துவ அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ரூபா பத்து இலட்சத்தி ஜம்பத்தி மூவாயிரம் பெறுமதியான மருத்துவ பொருட்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அலுவலகத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்ட பெரண்டீனா நிறுவனத்தின் இணைப்பாளர் சி.சிவஞானசேகரன் அவர்களால் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பொருட்களை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.உமாசங்கர்,உதவி மாவட்ட செயலாளர் திருமதி லிசோ கேகிதா ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
—