மன்னாரில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

DSC 3450
DSC 3450

மன்னாரில் இன்றைய தினம் (3) காலை 66 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்டத்தில் இந்த வார இறுதியில் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு 2 ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமாகும்.

ஏற்கனவே 30 வயதிற்கு மேற்பட்ட 52 ஆயிரத்து 628 பேர் தமது முதலாவது தடுப்பூசியையும்,500 பேர் 2வது தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

எனவே மக்கள் தடுப்பூசியை பெற்றுக் கொண்டாலும் தமது சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.