கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை

70ebacdb 962b 4abd b635 a6dc33e848cc
70ebacdb 962b 4abd b635 a6dc33e848cc

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநெச்சி மாவட்ட அமைப்பாளரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர் தவநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி நடவடிக்கைகள் கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

தெரிவுசெய்யப்பட்ட 9 நிலையங்களின் ஊடாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் 6 ஆவது நாளாக இன்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களின் தேவைக்கான மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகள் தேவையாக உள்ளதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த 15 ஆயிரம் தடுப்பூசிகளையும் விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தவநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.