ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசகராக தன்னை அறிமுகப்படுத்தி மொரட்டுவ பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த நபரொருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு தற்போதைய நிலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இவை தொடர்பிலான சம்பவங்கள் நடைபெறுகின்ற வேளையில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கோரியுள்ளது.