ஐ.நா கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்கு தயாராகும் இலங்கை

un
un

அடுத்த வருடம் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக சர்வதேச உறவுகளின் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன் போது புதிய அரசாங்கத்தின் நிலை தொடர்பிலும், 30/1 தீர்மானம் பற்றிய தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பற்றியும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இதற்கு முன்னர் ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமே இருந்ததாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.