எரிபொருள் பதுக்கி விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இது குறித்து மேலும் தெரியவருவதாவது கொடிகாமம் விடத்தற்பளை மிருசுவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கொடிகாமம் காவற்துறை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 280 லீற்றர் டீசலும் 60 லீற்றர் பெற்றோலும் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து குறித்த எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தகாவற்துறையினர் குறித்த நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தன