முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர், இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மே 09ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்திருந்தார்.
மே 09 தாக்குதலுக்கும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.