பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் நாள் இந்தியாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், திருப்பதிக்கு சென்று வெங்கடாச்சலபதியை தரிசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பவியேற்றதை அடுத்து தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டிருந்தார்.
அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் இந்தியாவிற்கு சென்றிருந்தார்.