எதிர்வரும் மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார உற்பத்திக்கு போதுமான நீர் ,மின் ஆலைகளுக்கு அருகில் இன்மை மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்காக மேலும் கடனுக்கு எரிபொருள் வழங்குவதற்கு இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் கைவிட்டமையே இதற்கு காரணமாகும்.
நாட்டில் பொதுவாக 450 மெகாவோட் மின்சாரம் நாளாந்தம் தேவைப்பட்ட நிலையில் தற்போது 500 மெகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதற்கு கடுமையான வெப்பமான காலநிலையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.