86 பேர் பாதிப்பு – 222 பேர் தொடர்ந்து கண்காணிப்பு

1 corona 3
1 corona 3

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்வடைந்துள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை நேற்றிரவு வரை 82 ஆக இருந்த நிலையில், மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிலருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்தே இன்று காலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, 222 பேர் தொற்று சந்தேகத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.