ஊரடங்கு அம்பாறை மாவட்டத்திலும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது

a 044
a 044

கொழும்புஇகம்பஹா,புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (24)  காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் திங்கட்கிழமை(23) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கிழக்கு மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.அத்துடன் பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் ஊடரங்கு அமுல்படுத்த பொலிஸார் இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன்  குறித்த கிழக்கு  பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை(24) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.

அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது  சில  தனியார் போக்குவரத்து சேவைகள் நடைபெற்ற நிலையில்   இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.