அரச ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
அரச அலுவலகங்களிலும் சரி தனியார் அலுவலகங்களிலும் சரி நாளை கடமைக்கு செல்லவும் இருக்கின்ற உத்தியோகஸ்தர்களுக்கு சில அறிவுரைகளை தெளிவுபடுத்த வேண்டி இருக்கின்றது.
அந்த விதத்தில் உத்தியோகத்தர்களிடம் யாராவது ஒருவருக்கு காய்ச்சல்இ தடிமல்இ இருமல் இதொண்டை வலி இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்கள் நாளை கடமைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை முறைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.