கொழும்பு, கம்பஹாவில் தொடர்கின்றது ஊரடங்கு

4 eryt
4 eryt

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

களுத்துறை, புத்தளம் உள்ளிட்ட ஏனைய 23 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நாளை (11) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற போதிலும் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனச் செயற்பாடுகளை வழமை நிலைக்குக் கொண்டு வருதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு நாளை முதல் ஆரம்பமாகும்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட அதற்கான நிபந்தனைகளில் மாற்றங்கள் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.