நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 293 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 291 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.