கொரிய சர்வதேச அமைப்பிடமிருந்து மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு!

இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக கொரியாவின் சர்வதேச அமைப்பொன்றினால் 22 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (28) சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் குறித்த கொரிய சர்வதே அமைப்பின் தலைவரினால் இவை கையளிக்கப்பட்டன.

சுகாதார பாதுகாப்பு ஆடைகள் 1008, பாதுகாப்பு கண்ணாடிகள் (Protective Goggle) 480, பாதுகாப்பு கையுறைகள் (Protective Gloves) 2000 என்பன இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் வழங்கப்படுகின்ற உதவிகளை மதிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இதன் போது தெரிவித்தார்.