மறைந்த வைத்தியரும் நடிகருமான சேதுராமன் கட்டிய வைத்தியசாலையை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார்.
தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிபராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் வைத்தியர் சேதுராமன்.
இவர் கடந்த மார்ச் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
36 வயதே ஆன சேதுராமனுக்கு உமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். சேதுராமன் உயிருடன் இருக்கும் போது ஈ.சி.ஆர் சாலையில் வைத்தியசாலையொன்றை ஒன்றை கட்டி வந்துள்ளார்.
இந் நிலையில் சேதுராமனின் பிறந்ததினமான இன்று அந்த வைத்தியசாலையை சேதுராமனின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சந்தானம் திறந்து வைத்துள்ளார்.
திறப்பு விழாவின் போது சேதுராமனின் அருகே நின்று எடுத்த புகைப்படத்தை, சந்தானம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நட்பின் அடையாளமாக மறைந்த தனது நண்பரின் வைத்தியசாலையை ஆரம்பித்து வைத்த சந்தானத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.