மட்டக்களப்பில் மீண்டும் அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !

coronavirus 4914026 1280
coronavirus 4914026 1280

மட்டக்களப்பு பட்டிப்பளை சுகாதார பிரிவிலுள்ள மாவடிமுன்மாரியில் கொழும்பில் இருந்து தடிமன் காச்சலுடன் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு வந்த ஒருவருக்கு கொரோன தொற்றுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை (30) கண்டறியப்பட்டதுடன் ஓட்டுமாவடியில் ஒருவர் உட்பட இருவர் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 33 ஆக அதிகரித்துள்ளது எனவே கொழும்பில் இருந்துவருபர்கள் தொடர்பாக சுகாதர திணைக்களத்துக்கு அறியத்தருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ..லதாகரன் தெரிவித்தார்.

பேலிய கொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் ஓட்டுமாவடி .வாழைச்;சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 31 பேர் இதுவரைக்கும் கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக கொழும்பில் பம்பலப்பிட்டியில் பணிபுரிந்துவிட்டு வீடுதிரும்பிய பெரியபோரதீவு பட்டாபுரத்தில் ஒருவரும் அவ்வாNறு கொழும்பில் பணிபுரிந்த நிலையில் காச்சல் ஏற்பட்டதும் அவா வீடுதிரும்பிய நிலையில் வைத்தியசாலைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டார்

குறித்த நபர் கொரோனோ தொற்றுடன் பொது பேரூந்தில் பிரயாணம் செய்து வீடுவந்தடைந்துள்ளதாகவும் இவருடன் பிரயாணம் செய்தவர்கள் தொடர்பாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று வெள்ளிக்கிழமை (30) வாழைச்சேனை மற்றும் மாவடிவேம்புமுன்மாரியில் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து மாவட்டத்தில் 33 ஆக தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர்;.

எனவே பொதுமக்கள் கூடியளவு சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் அவதானமாக செயற்படுமாறும் கொழும்பில் இருந்துவருபர்கள தொடர்பாக தகவல்களை பொது சுகாதார திணைக்களத்திற்கே பொலிசாருக்கே அறிவிக்குமாறும் பொதுமக்கள் மற்றும் அனைவரும் ஓத்துழைப்புடன் செயற்பட்டால் மட்டுமே இந்த கொரோனா தொற்றை தடுக்கமுடியும் என்றார்