பாலிவுட் நடிகை ஊர்வசி 5 கோடி நிவாரண உதவி

i3 4 3
i3 4 3

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுட்லா கொரானோ நிவாரண நிதியாக 5 கோடி ரூபாயை வழங்கியிருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்னதாக டிக் டாக் நேரடி ஒளிபரப்பு நடனப் பயிற்சி வீடியோ ஒன்றை அவர் வழங்கினார். அந்த வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மூலம் கிடைக்கும் வருவாயை கொரானோ நிவாரண உதவிக்கு வழங்கப் போவதாக அவர் அறிவித்தார்.

அதன்படி அவர் ஜும்பா, டபடா, லத்தீன் நடனப் பயிற்சிகளை வழங்கினார். அந்த நேரடி ஒளிபரப்பை 1 கோடியே 80 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர். அதன் மூலம் 5 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. அதை அப்படியே கொரானோ நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் ஊர்வசி.

ஹிந்திப் படங்களில் கிளாமர் வேடங்களில் நடித்து வரும் ஊர்வசிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 25 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். அவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவிடுவது வழக்கம்.

“எந்த நன்கொடையும் சிறியதல்ல, ஒன்றாக இணைந்து இந்த உலகத்திற்கு உதவி செய்து வெல்வோம்,” எனத் தெரிவித்துள்ளார் ஊர்வசி.