உண்மைக் காதல் இன்னமும் இருக்கிறது: திரிஷா

i3 3 4
i3 3 4

ஊரடங்கால் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்து வரும் நடிகை திரிஷா, இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் நேற்று உரையாடினார். அப்போது ரசிகர்களின் பல கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாக பதில் கூறினார்.

திரிஷாவின் முன்னாள் காதலராக குறிப்பிடப்படும் நடிகர் ராணாவிற்கு திருமணம் உறுதியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலர் திரிஷாவிடம் காதல் பற்றிய கேள்விகளையே முன் வைத்தனர். ரசிகர் ஒருவர், “வாழ்க்கையின் காதலை சந்தித்து விட்டீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த திரிஷா, “இப்போது அப்படி ஒன்றை நான் சந்திக்கவில்லை” எனப் பதிலளித்தார். பின்னர் மற்றொரு கேள்விக்கு, “காதல் ஒரு பட்டாம்பூச்சி போன்ற உணர்வை கொடுக்கும். உண்மை காதல் இன்னமும் இருக்கிறது. உண்மையாக, பைத்தியக்காரத்தனமாக, ஆழமாக உன்னைவிட்டு இருக்க முடியாது என்பது மாதிரியான காதல் இன்னமும் இருக்கிறது. அப்படியான ஒரு காதலை அடையும்வரை நாம் காத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த உரையாடலின் போது பொன்னியின் செல்வன் பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்க திரிஷா மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.