என் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா

i3 2 9
i3 2 9

திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை ராதிகா. சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிஸியான நடிகையாக தொடர்ந்து வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

80களின் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணியாற்றியவர் நடிகை ராதிகா. ஆனால் அவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் படங்களில் நடித்ததில்லை. அது ஏன் என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது.

இந்நிலையில் அதுபற்றி ரசிகர் ஒருவர் ராதிகாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “கே.பாலச்சந்தர் படத்தில் நடிப்பது பற்றி ஒரு சில முறை நாங்கள் ஆலோசித்திருக்கிறோம். ஆனால் அவர் எனக்காக அற்புதமான ஒரு கதையை எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை என்பதுதான் சோகம். இதுவரை எனக்கு அது மிகப்பெரிய வருத்தம் தான்”, என பதிலளித்துள்ளார்.