த்ரிஷ்யம் எழுப்பிய கேள்விகளுக்கு 2ஆம் பாகத்தில் விடை

i3 5 2
i3 5 2

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம்.. மோகன்லால் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் விரைவில் துவங்கப்பட உள்ளது.. சில நாட்களுக்கு முன் இதன் ஹீரோ மோகன்லாலே தனது பிறந்தநாள் அன்று இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதுமட்டுமல்ல, இந்தப்படமும் முதல் பாகத்தைப்போல மக்களை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு அழைத்துவரும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளார் மோகன்லால்.

இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “இந்த கதையை நான் முழுவதுமாக படித்தபோது இயக்குனர் ஜீத்து ஜோசப் இதை எந்த அளவுக்கு கிரிப்பாக உருவாக்கி இருக்கிறார் என்பது தெரிந்தது. த்ரிஷயம் படம் வெளியானபோது மக்களிடம் ஒரு தாக்கம் ஏற்பட்டதுடன் அவர்கள் மனதில் சில கேள்விகளும் எழுந்தன. அவற்றுக்கெல்லாம் விடை சொல்லும் படமாகவும் த்ரிஷ்யம்- 2 இருக்கும் என கூறியுள்ளார் மோகன்லால்.