தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் உருவாகியிருந்தாலும் என்றும் நிரப்பப்படாத கதிரை ஒன்று உண்டு என்றால் அது இசைஞானி இளையராஜாவின் கதிரை என்றே கூறலாம்.
ஆம்! இசைஞானி இளையராஜா இன்று (செவ்வாய்கிழமை) தனது 77ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக சாதனை படைப்பதும் அந்த சாதனையை தக்கவைத்துக்கொள்வதுமே இங்கு பெரும் சவாலாக காணப்படுகிறது. ஒரு தனிமனிதன் தனது வாழ்க்கையில் தனித்துவமிக்க இடத்தை பிடிப்பதற்கு அதிகளவு சிரத்தை எடுத்துகொள்ளவேண்டும். அவ்வாறு பல சிரமங்களை எதிர்கொண்டு இசையின் நாயகனாய் வலம் வருபவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது.
1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வெளிவந்த அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம் ஆரம்பமான இளையராஜா என்ற இசை மேதையின் இசைப் பயணம், 44 ஆண்டுகளைக் கடந்தும் நம்மை கட்டிப்போட்டு வைத்துக்கொண்டிருக்கிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், எத்தனையோ பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக்கலைஞர்கள், கோடிக்கணக்கான இரசிகர்கள் என அவர் பதித்த தடங்கள் ஏராளம்.
அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரரான இளையராஜா இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருதுகளை பல்வேறு காரணங்களால் நிராகரித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்க்குரல் வானொலிகுடும்பம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
.