என்ன கதாபாத்திரத்தில் நடிக்கலாம் எனக் கேட்கும் ராஷ்மிகா

i3 24
i3 24

தெலுங்குத் திரையுலகில் இளம் ரசிகர்களை தன் பக்கம் அதிகம் இழுத்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. “கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், சரிலேறு நீக்கெவரு, பீஷ்மா” ஆகிய படங்களில் அவருடைய நடிப்பிற்கு பலர் ரசிகர்களாகிவிட்டார்கள்.

தற்போது ‘புஷ்பா’ தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார். கன்னடத்தில் ‘பொகரு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படம் வெளிவந்த பின்தான் ராஷ்மிகா பலருக்கு இங்கு அறிமுகமாவார் என்றாலும் அவரது தெலுங்குப் படங்கள் மூலம் சிலருக்கு அறிமுகமாகிவிட்டார்.

கொரானோ ஊரடங்கிலும் அவ்வப்போது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருக்கிறார். நேற்று ரசிகர்களிடம் ஒரு ஆலோசனை கேட்டிருக்கிறார்.

“இப்போதும், எதிர்காலத்திலும் என்னை எந்த மாதிரியான கதாபாத்திரங்களில், படங்களில் பார்க்க விருப்பம் எனச் சொல்லுங்கள். நான் மிக ஆர்வமாக உள்ளேன். ஒரு குறிப்பையும் தாருங்கள், சிறப்பு,” எனக் கேட்டுள்ளார். ரசிகர்கள் ஆயிரமாயிரம் ஆலோசனைகளைக் கூறி வருகிறார்கள்.