பிரித்விராஜிற்கு கொரோனா தொற்று இல்லை

i3 25
i3 25

நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் தான் நடித்து வரும் ஆடுஜீவிதம் என்கிற படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மார்ச் மாதம் ஜோர்டன் நாட்டுக்கு சென்றார். கொரோனா தாக்கம் காரணமாக அங்கே திடீர் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் 58 பேர் கொண்ட படக்குழுவினருடன் இரண்டு மாத காலம் அங்கேயே தங்கினார். இந்த நிலையில் ஜோர்டன் நாட்டில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், அதனை தொடர்ந்து சிறப்பு விமானம் மூலம் படக்குழுவினருடன் சொந்த ஊர் திரும்பினார் பிரித்விராஜ்.

கொச்சி விமான நிலையம் வந்து இறங்கியதுமே ஒரு தனியார் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டு அரசு விதிமுறைகளின்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது தனது வீட்டிலேயே அடுத்த 7 நாட்களும் தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளார் பிரித்விராஜ். அவர் வந்ததுமே அவருக்கு கொரோனா தோற்று சோதனை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனும் விதமாக நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. இந்த தகவலை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டுள்ள பிரித்விராஜ், மீதியுள்ள ஒன்றிரண்டு தனிமைப்படுத்தல் நாட்களையும் முறைப்படி பின்பற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.