இப்படி தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் சுஷாந்த்-அதிர்ச்சி தகவல்

559372
559372

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த யூன் மாதம் மும்பையில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் இன்னும் சந்தேகம் நீடித்து வருகிறது.

இதுகுறித்து சுஷாந்தின் காதலி ரியா மீது சுஷாந்தின் தந்தை பல பிரிவுகளின் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை சட்டத்தின் மூலம் தீர விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தது.

இந்நிலையில் சுஷாந்தின் மரணம் குறித்து தற்போது அவரின் முன்னாள் உதவியாளர் அன்கிட் ஆச்சார்யா சில விசயங்களை அதிரடியாக கூறியுள்ளார்.

இதில் அவர் தனக்கு சுஷாந்தை நன்றாக தெரியும் என்றும், அது தற்கொலை என நம்ப முடியவில்லை, நிச்சயம் கொலை தான்.

சுஷாந்த் தூக்கு மாட்டிக்கொண்டார் எனில் கழுத்தில் U வடிவிலான தடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தால் O வடிவில் தடயம் இருக்கும், சுஷாந்தின் கழுத்தில் இப்படியே இருந்தது.

அத்துடன் தற்கொலை என்றால் கண் விழிகள் பிதுங்கியிருக்கும், நாக்கு வெளியே வந்திருக்கும். ஆனால் சுஷாந்துக்கு அப்படியில்லை. சுஷாந்தின் கழுத்தில் அவரின் நாயின் பெல்ட் தடம் தான் இருந்தது. சுஷாந்தை பெல்டால் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறான் குற்றவாளி, புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என அவர் கூறியுள்ளார்.