தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் இயக்குனர் அட்லீ.
இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இளம் இயக்குனராக அறிமுகமானார்.
இதன்பின் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து தெறி எனும் வெற்றி படத்தை இயக்கினார்.
ஆனால் இந்த படம் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சத்திரன் படத்தின் கதையை போலவே இருக்கிறதே என பல விமர்சனங்கள் எழுந்தது.
இதன்பின் மீண்டும் விஜய்யுடன் கைகோர்த்து மெர்சல், பிகில் என இரு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார்.
இருந்தாலும் மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படம் போலவும், பிகில் படம் சக்தே இந்திய படத்தை போல் இருக்கிறது என்று மீண்டும் சர்ச்சைகள் எழுந்தது.
இந்த மாபெரும் வசூல் படங்களை தொடர்ந்து ஷாருக்கானுக்கு படம் பண்ண பாலிவுட்டுக்கு சென்றார் இயக்குனர் அட்லீ.
இந்நிலையில் இயக்குனர் அட்லீ தனது படத்தின் கதையை நடிகர் ஷாருக்கானின் தற்போது முழுமையாக கூறிவிட்டாராம்.
ஆனால் கதையை கேட்டவுடன் ஷாருக்கான் இது மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வெளியான நாயகன் படம் போல் இருக்கிறது என கூறி, அட்லிக்கு சாதகமான பதில் சொல்ல தாமதித்து வருகிறாராம்.